Wednesday, February 28, 2018

புதிய (அதி திருத்தமான) இயங்கியல்

இப்பதிவு  28/02/2018 இல் பிரசுரிக்கப்பட்டது. 


பிற்சேர்க்கைகள் - 12/03/2018

- இப்பதிவுக்கு முன்னைய பதிவுகளில் இயங்கியல் பொருள்முதல்வாதப் பார்வையா எனக்கும் இருந்தது. ஆகையால் முன்னைய பதிவுகலிலான 'முரணே இயக்கத்தின் அடிப்படை' என்கிற அதி திருத்தமற்ற கருத்தைப் பல இடங்களில் பதிவு செய்திருக்கிறேன். வருந்துகிறேன். திருந்தி விட்டேன். பழைய பதிவுகளைத் திருத்திக் கொண்டிருக்க நேரமில்லை. 

- பொறுமையாக இப் புதிய இயங்கியலின் வழி ஆராய்கையில் பழைய ஹெகலிய, மார்க்சிய கருத்துமுதல், பொருள்முதல் அடிப்படைகளில் அமைந்த தவறான இயங்கியல் தத்துவங்கள் மீறப்பட்டுவிட்டது உறுதியாகிறது.

- இது மார்க்சியத்தை 'மாற்றியமைப்பது', 'திருத்தத்துவது' அல்ல. அப்படிப் புரிந்து  கொள்வது மார்க்சியமும் விளங்கியிருக்காததால் வருகிற விளக்கக்கேடே . இது தத்துவ வரலாற்றின் அதியுயர் பாய்ச்சலாகும். இருக்கிறஎல்லாவித துறைகள், முறைகள், முடிவுகள். அடிக்கோள்கள் எல்லாவற்றையும் பின்தள்ளி இப் புதிய இயங்கியல் வளர்ந்து விட்டது. எதையும் சுருக்கவில்லை. தான் முடிவில்லாமல் வளர்ந்து ஏனையவற்றை (எல்லாவற்றையும்) முந்தி விட்டது என்பதே உண்மை.

- இப்பதிவில்" காலம் இடத்தை முந்தியது எனக் கருதுகிறேன், அதை உறுதிப்படுத்த வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தேன். புதிய இயங்கியல் அதை உறுதி படுத்தி விட்டது.

- இந்தப் பதிவில் வேறுபல விசயங்களையும் திருத்தியிருக்கிறோம் (அடிப்படைகள் மாறவில்லை, இன்னுமின்னும் நுணுக்கமாக, மிக மிகத் திருத்தமாக வளர்த்திருக்கிறோம்). இந்தத் திருத்தும் செயற்பாடு முடிவற்றது. இயங்கியல் தளத்தில் ஏறுகிற அனைவருக்கும் முடிவற்ற ஆய்வு வெளி, பிரயோக வெளி இருக்கிறது. இது சமூக மட்டத்துக்கு வந்தடைகியல் முடிவற்ற வளம், வாழ்வு வர இருக்கிறது. இப்பதிவுகள் இயங்கியல் தளத்துக்கு ஏறுவதற்கானது. இதிலும் குறைபாடுகள் உண்டு. ஆனால் அடிப்படைகள் மிகச் சரியானவை.

- இதெல்லாம் 'கற்பனை', விஞ்ஞான விரோத மனநிலை என்றெல்லாம்  பதட்டமடைய வேண்டியதில்லை. கணினி, கணித வெளிகளில் புறவயப்பட்டு, விஞ்ஞான நிறுவல்கள், வாய்ப்பு பார்த்தலின் ஊடு மட்டுமே இது பிரயோக வெளிக்கு வரும். அப்படியில்லாமல் ஏமாற்றிக் கொண்டு வர இது ஒன்றும் மார்க்சியம் போன்ற போலி விஞ்ஞானங்களின் விஞ்ஞானமல்ல. மார்க்சியம் போல அடிப்படைவாத, அவசரக் குடுக்கைத்தன அரைவேக்காட்டுத் தத்துவம் அல்ல.

- 'முழுமை ஞானமான' மார்க்சியம் ஏன் கணிதவெளிகளுக்குள் இல்லை? ஏன் மார்க்சால் (அவர் ஆன மட்டும் முயன்றார்) கணித வெளியை உருவாக்க முடியவில்லை? ஏனெனில் அது ஒரு போலி விஞ்ஞானங்களின் விஞ்ஞானமாகும். அவரது கணித முயற்சிகளைப் பார்வையிட்டேன். அவற்றின் அடிப்படையே (frame of reference, axioms) தவறு.

- இந்தப் புறவயப்படுகிற செயற்பாட்டை மனித நோக்குத்தான் செய்து முடிக்கும் என்று பொய் சொல்ல முடியாது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஒரு விஞ்ஞான முடிவு என்று மார்க்சியம் எந்தக் குற்றவுணர்ச்சியுமின்றிப் பொய் சொல்லி வந்தது போல இந்த இயங்கியல் பொய்களுக்கு மேல் தன்னுடைய வழிமுறைகளையும் முடிவுகளையும் கட்டமைக்காது. நாம் புறவயப்படுத்த முடிந்த வரை முயலுகிறோம்.

- எங்களுடைய பல முன்னுரிமைகளைத் தாண்டி இந்த ஆய்வுக்கு  வாரத்துக்கு மூன்று மணி நேரம் வரையில் மட்டுமே ஒதுக்க முடியும். நாங்கள்தான் செய்ய வேண்டுமென்று பதுக்கி வைக்கமால் எவரும் பங்களிக்கவே நாம் இந்த வலைத்தளத்தைப் பிரசுரித்து, முகநூலிலும் அறிவித்தோம். 

- இந்த வலைத்தளத்தில் வேண்டிய அளவுக்கு விளக்கம் இருக்கிறது. இவற்றிலிருந்தும் விளங்காது விடின் அவரவர் தங்கள் தளங்களை முயன்று உயர்த்திக் கொள்ள வேண்டியதுதான். 





மிக ஆழமான கேள்விகள், செயல்கள் மூலம் வழிப்படுத்தி, என்னுடைய பிழைப்புவாத சித்தாந்தங்களை முழுவதுமாக முறியடித்த, எல்லாவித பிற்போக்குக் கூறுகளிடமிருந்தும் என்னை விடுவித்த இயக்கக்காதலான என்னுடைய அதிதுணை நிலாவுக்கு, மிகத் திருத்தமான இயங்கியலுக்கான எனது சிந்தனை முறையை அன்பளிப்புச் செய்கிறேன். 

விரிவான, சற்று இறுக்கங் குறைந்த, தளர்ந்த நிலைப் பதிவு (இணைப்பு). நேரடியான தத்துவப் பரிச்சயம் இல்லாதவர்கள் முதலில் வாசித்து, யோசித்து, சிந்தனை முறையை அமைத்துக் கொண்டு இதை வாசிப்பது உகந்தது.

மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஹெகலைத் திருத்தியதில் குறைபாடு உண்டு. அவர்களுடய இயங்கியல் அறிவும் மிகச் சரியானதல்ல. லெனினினதும் அப்படித்தான்.

ஹெகலின் இயங்கியலிலான சறுக்கல் பின்வருமாறு.

ஹெகல் "ஆதிக்கருத்தையும்" (இது அவருடைய 'கருத்து', pun intended), பல பண்புமாற்றங்களினூடு வருகிற, இயங்கியலைக் கைக்கொள்ளுகிற சிந்தனைக் கருத்தையும் தேவையற்று இணைத்து தான் ஆக்கி வந்த இயங்கியலைத் தானே வீணில்  முறியடித்தார்.

அது ஒரு சிறு சறுக்கல்தான். விளக்குகிறேன்.

ஒழுங்கு என்பது நிகழ்வுப் போக்கில் நடக்கும் விபத்துச் சாத்தியமே என்பதை ஹெகல் தவற விட்டார்.

தான் இயங்கியலினூடு  வந்தடைந்த அத்தனை 'ஒழுங்கும்' எங்கிருந்து வருகிறது என்று மலைத்து, தன்னுடைய சிந்தனைத் திறனைக் கண்டு தானே மலைத்து (சிந்தனையிலிருந்து சிந்தனையில் முடிகிற கருத்துமுதல்வாதச் சுழலை இந்த மலைப்பு உருவாக்கியது), அத்தனை ஒழுங்கும் கருத்தாக இருந்து பின் புறத்தில் பாய்ந்து இன்று மறுபடி என் சிந்தனையின் ஊடாக முழு வட்டத்தை ஆக்கிக் கொண்டது என்று ஹெகல் எழுதுகிறார்.

ஒரு தடவை மார்க்ஸ் ஒரு மார்க்சியவாதியா என்பது தனிப்பட்ட ஆராய்ச்சி என்று எழுதியிருந்தேன்.

ஹெகல் ஒரு இயங்கியலாளரா என்பதும் அப்படியே.

நான் இயங்கியல்வாதி/இயங்கியல்வாதம் என்று எழுதுவதில்லை. இயங்கியலாளர்/இயங்கியல் என்றே குறிப்பேன். இதை வாசித்து முடிக்கையில் ஏன் என்பது இன்னுமும் தெளிவாகப் புரிந்து விடும். 

கோட்பாட்டை வளர்த்தெடுப்பவர்கள் அதை அப்படியே உள்வாங்கி அனைத்திலும் பிரயோகிப்பதில்லை. அது பயிற்சிக் காலத்தினூடே வருகிறது.

ஒரு இயங்கியலாளனான எனக்கு முடிவற்ற ஓட்டம் (அதை முடிவற்ற முனேற்றம் ஆக்குவது) மிக இயல்பான ஒன்று. வட்டத்தை மூட  வேண்டும் என்கிற உந்தல் எனக்கு இல்லை. ஏனெனில் நான் மிகத் தேர்ந்த ஒரு இயங்கியலாளன்.

நான் மட்டுந்தான் என்றில்லை, எவரும் மிகத் தேர்ந்த இயங்கியலாளர்களாக வரமுடியும். வேண்டும். அந்த இயக்கத்தைத் துரிதப்படுத்தவே எழுதுகிறேன்.

வட்டத்தை மூடுகிற இயங்கியல் விரோத உந்தல் ஹெகலுக்கு வந்துவிட்டிருக்கிறது.

இந்தச் சறுக்கல் தேவையற்ற பொருள்முதல்வாதத்தை இயங்கியலுடன் இணைக்கிற நிலைக்கு (மார்க்ஸ், ஏங்கல்ஸ், டைஜஸ்டன் போன்றவர்களின்)  தவறான முடிவுக்கு இட்டு வந்தது.

அவர்களும் மூடுவதில் குறியாக இருந்தார்கள். பருப்பொருளை அடிப்படையாக்கி தவறான மூடுதலைச் செய்தார்கள். மூடுவதே முழுமை என்கிற இயங்கியல் விரோத மனநிலையிலிருந்து மீளாதவர்களாய் இருந்தார்கள்.

ஹெகலை ஏற்றால் 'விதிவசவாதம்' ஆகிவிடும் மனிதச் செயலுக்கு அர்த்தமற்றுப் போகும் என்று சொல்லுகிற லெனின் 'நிகழ்வுப் போக்குகளினூடு வரைவுபடுவதல்ல சோசலிசம்' என்று சொல்லுவது என்ன? அது தவறான நியதிவாதம்.

இயக்கமும் பொருளும் பிரிந்திருப்பதில்லை என்றுதான் லெனினும் எழுதுகிறார்.

இது லெனினின் இயங்கியல் புரிதலின் குறைபாடே. உண்மையில்  இது மார்க்சியர்களின் பொதுவான குறைபாடு. 

எவ்விதம் ஆதிப் பொதுவுடமையும்  எனி வரமுடிகிற பொதுவுடமையும் ஒன்றல்லவோ, மிக வேறுபட்டதோ, மிக மாறுபட்டதோ, பல பண்புமாற்றங்களைக் கடந்து வருவதோ (முன்னையது வரட்சி ---> தொழிநுட்பம் ---->  பின்னையது வளம்) அதைப் போல "ஆதிக்கருத்தும்" முடிவுக் கருத்தும் மிக மாறுபட்டன.

அது ஹெகல் நினைத்து போலக் "கருத்து" அல்ல.

மார்க்சியர்கள் "முடிவுகட்டியது" போலப் பருப்பொருளும் அல்ல.

அது பருப்பொருளற்ற, கருத்தற்ற இயக்கம்.

இன்னுமும் திருத்தமாகச் சொன்னால் அது முரணற்ற இயக்கம்.

ஆதி இயக்கம் முரணற்ற இயக்கம். நோக்கற்றது. பருப்பொருளற்றது.

முரண்பாடுகளை அடிப்படையாக்கி காரணத்தால் இயங்கியலும் முரண்பாடுகளற்ற கருத்துவெளியை நோக்கி நகர்கிறது

அது நோக்குள்ளது.  தொடர்ந்த இயக்கத்தில் முரணற்ற 'கருத்து/சிந்தனை' இயக்கத்தை தொடந்து அண்மிக்கிறது (எல்லை).  

ஆரம்ப முரணற்ற இயக்கமும், பின்னைய முரணற்ற இயக்கமும் ஒன்றல்ல. 

முரணின்றி இயக்கம் எவ்விதம் நிகழ முடியும்?

விளக்குகிறேன்.

மார்க்சியத்தை, குறைபாடுள்ள இயங்கியல் பொருள்முதல்வாதத்தை விஞ்ஞானமாக அறிவித்து, அதை விஞ்ஞானமாகப் புரிந்து கொண்டு அது தோற்றதும் அதை விஞ்ஞானத்தின் தோல்வியாக, அறிவின் தோல்வியாகத் தவறி எடுக்கிற (பிரஞ்சு) பின்னவீனவாத சிந்தனையின் அதே தவறை மார்க்சியர்கள் விட்டார்கள். இன்றுவரையில் விட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

 ஹெகலின் இயங்கியல் தருக்கத் தவறு கருத்துமுதல்வாதத்தைத் தேவையற்றுக் கொண்டு வர, அதன் முரண்பாட்டை உணர்ந்து மேம்பட்ட முரண்பாடாக (முரண்பாட்டைத் தீர்க்கவில்லை) பொருள்முதல்வாதத்தை (பருப்பொருளின் ஆதித்தன்மை) மார்க்சியர்கள் கொண்டு வந்தது மேற்படி தவறுக்கு ஒப்பானது.

பொருள்முதல்வாதமும், பருப்பொருளிலிருந்து இயக்கத்தை அணுகுவதும், பருப்பொருள் (பொருள் என்றே தத்துவ வழக்கில் எனிக் குறிப்பேன்) இயக்கத்துடன் எப்பொழுதும் இருப்பதென்பதும்
"ஆதிக்கருத்து" முடிவை விட முன்னேற்றகரமாக இருக்கிறது.

ஆனால் முரண்பாட்டைத் தீர்க்கவில்லை. இயங்கியலை 'முழு' உள்ளிணக்கத் தத்துவமாகாமல் இது தடுத்துவிட்டது.

எவ்விதம் ஆதிப் பருப்பொருள் தீர்வு முரண்பாட்டைத் தீர்க்காமல் இருக்கிறது என்பதை விளக்குகிறேன்.

1. பொருள்->அகமுரண் (சுயமுரண்)->இயக்கம்  என்பதை அடிப்படையாகக் கொண்டதே மார்க்சிய மூலவர்களின் தத்துவம்.

2. இந்த அடிப்படை முரணானது.
ஏனெனில் 'முரணை' 'உருவாக்குவது', 'முரணை' 'வைப்பது' இன்னொரு இயக்கமே. அதாவது இரண்டு எதிர்ச்சக்திகளை/விசைகளை/கூறுகளை  அருகில் வைப்பது ஒரு இயக்கம்/வேலை/சக்திமாற்றம். மிகச் சுருக்கிச் சொன்னால் முரண் உருவாகுவது, அல்லது உருவாக்கப்படுவது எதில் எதுவாக இருந்தாலும் அது ஒரு இயக்கம்.

3. ஆகையால் பொருள்-->இயக்கம்-->முரண்-->இயக்கம் --- என்று ஏற்படுகிறது. இதுவும் தர்க்கத்தவறோடு இருக்கிறது. பொருளில் இருந்து இயக்கம் உருவாக முரண் வேண்டுமே. பொருள் (நிலை) தன்னை மறுத்து (முரண்பட்டே) இயங்க முடியும். நிலைமறுப்பே இயக்கம்.

4. இயக்கம் ---> பொருள் ---> முரண்--> இயக்கம்
 இதுவும் தருக்கத் தவறு. இயக்கம் எவ்விதம் முரணின்றிப் 'பருப்பொருள்' ஆக முடியும்? இது மேற்சொன்னதின் தலைகீழ் தவறு .

5. இயக்கம் ---> முரண் ----> பொருள்--->
 இது மட்டுமே உள்ளிணக்கமான தொடராக இயங்கியல் தர்க்கத்துக்கு இருக்கிறது. அதியுச்ச உள்ளிணக்கத்தை ஒரு தத்துவம் அடைகிற வழியாகவும் இருக்கிறது.

6. அதாவது முரணற்ற இயக்கம் தன்னைப் படியேற்றிக் கொள்ள (சுய படியேற்ற இயக்கங்களையும் (bootstrapping) அவற்றின்  அடிப்படைகளையும் பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன்), அதாவது இயக்கம் தன்னை இயக்கும் விழைவில் முரணை உருவாக்குகிறது.

இயக்கம் தன்னை இயக்குவது சுயமுரண் அல்ல. அது உள்ளார்ந்த ஆக்கப் பண்பு. ஆனால் அதை 'நடைமுறைப்படுத்த' அது உருவாக்குகிற பண்பு 'சுயமுரண்'. சுயமுரணும் அடிப்படையான ஆக்கப்பண்பும் முரண்கள். மிக அடிப்படையான முரண்இயக்கம் சுயமுன்னேற்றச் செயற்பாடு.  மிக அடிப்படையான முரண்நிலை சுயமுரண்.

"இயக்கம் தன்னை இயக்குகிற" இயக்கத்தில் விளைபொருளாகிற முரண்-இயக்கம் சுயமுரணை உருவாக்குகிறது.

முரண் என்பது "இயக்கத்தின் இயக்கத்துக்கான" முதல் பண்பு.

7.இயக்கமே அடிப்படை. முரணற்றது. நோக்கற்றது. கருத்தற்றது. இயக்கம்  சுயமுன்னேற்றமடைகிற விபத்தாக முரண் பண்பை உருவாக்குகிறது.

மிக அடிப்படையானவை பொருளும் இயக்கமும் அல்ல.

இயக்கமும் முரணும்.

இவை இரண்டிலும் முதன்மையானது இயக்கம். 

8. முரணற்ற இயக்கம் என்பது மறுப்பதற்கு நிலைகளற்ற இயக்கம். நிலைப்பின் நிலைப்பும் (assertion of assertion) அங்கிருப்பதில்லை. நிலைமறுப்பின் நிலைமறுப்பும் (negation of negation) அங்கில்லை.

9. இந் நிலையில் இடம் எதுவும் இல்லை. ஆனால் காலம் இருக்க முடியும் என்றே கருதுகிறேன். நிச்சயமல்ல, உறுதிப்படுத்த வேண்டும். கால இடம் என்பது பொதுப்பண்புகளில் ஒன்றிணைந்தாலும் வேறான தனிப்பண்புகளையும் கொள்ளும். ஒவ்வொரு இணைந்த, பின்னிப்பிணைந்த இயக்கங்களிலும் முதன்மையை இனங்காண்பது என்பதே இயங்கியலின் அடிப்படை.

இயக்கம் சார்ந்தது காலம். இயக்கத்திலிருந்து காலம் உருவாக முடியும். ஆனால் இடம் பருப்பொருளில் இருந்து உருவாகுவது. இடம் காலத்துக்குப் பொதுப்பண்பு (ஒன்றல்லது பல), தனிப்பண்பும் (ஒன்றல்லது பல) உண்டு.

10. 'காலப்போக்கில்' மறுக்க நிலையற்ற 'மாறாத' இயக்கம் மாறுகிற இயக்கமாக மாறுகிறது. 7. இல் சொன்னது போல முரணைக் கொண்டு தன்னை முன்னேற்றுகிறது. முதல் முரணியக்கம் சுயமுன்னேற்றம், முதல் முரண் சுயமுரண். முதல் விளைவு இயக்கத்தின் இயக்கம்.

11. இந்தச் சுயமுரண் "இயக்கத்தின் இயக்கத்திலும்" தொழிற்படுகிறது. அதாவது "இயக்கம் --> இயக்கம்" இன் இயக்கமாக மாறுகிற பண்புமாற்றத்தில் பொதுப்பண்பாகக் கட்டத்தப்படுகிறது.

12. சுயமுரண் காரணமாக இயக்கத்தின் இயக்கம் தனக்கான எதிர்விளைவுகளையும்  உருவாக்குகிறது. அதுவே பருப்பொருள்.

13. பண்பேற்றம் பெறக்கூடிய பண்பும் பொதுப்பண்பாக இந்தப் பண்புமாற்றங்களினூடு கடத்தப்படுகிறது. அப்படிக் கடத்தாத பண்புமாற்றங்களின் விளைவுகள் இல்லாது  போகின்றன.

14. 
முரணற்ற இயக்கம் ----> உள்ளார்ந்த ஆக்கப் பண்பினூடு இயக்கத்தின் இயக்கத்துக்கான ஆக்க முனைப்பு ---> ஆக்க முனைப்பு உருவாக்குகிற முரண் கருவி ---> சுயமுரண் ----> இயக்கத்தின் இயக்கம் ----> சுயமுரண் ---> பருப்பொருள் ..... 

சாத்தியக் கூறுகளின் சாத்தியத்தை உருவாக்குகிற  இந்தத் தொடரோட்ட அடிப்படைகளில் இயங்குவதே என்னுடைய இயங்கியல்.

இது எவ்விதம் மிக மேம்பட்டு, அதியுயர் உள்ளிணக்கத்தை அடைகிறது என்பதைக் கீழே விளக்குகிறேன்.

இயங்கியலில் எந்த இரண்டு பின்னிப் பிணைந்தவற்றைக் கொடுத்தாலும் எது முதன்மை, எது இரண்டாம் நிலை என்று சொல்லத் தெரிய வேண்டும்.

ஒவ்வொரு சூழமைவிலும் இந்த முதன்மை, இரண்டாம் நிலை மாறி வரும். இடம் மாறும்.

உண்மையில் மீள்கிற முதன்மைக் கூறை மூன்றாவதாகவே கொள்ள வேண்டும். சுருளிவில் இயக்கத்தை விளக்கி எழுதியிருக்கிறேன்.

ஆனால் தொடக்கத்தை அறிய வேண்டும்.

கோழியா, முட்டையா என்பதைக் காரண-காரியத்தினூடு நாம் முட்டையே முதலில் வந்தது என்று கண்டறிந்தோம்.

இது வரைக்குமான மார்க்சிய இயங்கியலில் தவறான அடிப்படைகளாக இருக்கிற - "பொருளா, இயக்கமா" என்பதை தத்துவ இயக்கத்தினூடே கண்டறிய முடியும்.

இந்த இரண்டில் எதிலிருந்து எது என்பது கேள்வி.


லெனினால் பதிலளிக்க முடியவில்லை. பொருளும் இயக்கமும் எப்பொழுதும் ஒன்றாய் இயங்குவன என்கிற மட்டத்தில் விட்டுவிடுகிறார். அது இயங்கியல் விரோதம். 

மார்க்சிய மூலவர்களின் பொதுவான/தவறான/வழிவழியாக வருகிற புரிதல் பொருளில் இருந்து இயக்கம் என்பதே. பொருளின் பண்பே இயக்கம் என்பதே.

இது தவறு. இயக்கத்தின் விளைவே பொருள். பொருள் என்பது பண்பேற்றம் அடையக் கூடிய பண்பு.  இந்தப் பண்பை மேற்சொன்னது போல (13) இயக்கத்திலிருந்து பண்புமாற்றங்களினூடான பொதுப்பண்பாக வாங்கிக் கொண்டது.

இயக்கம் பிரிந்திருக்க முடியும், இயக்கம் பொருளைக் காட்டிலும் முதன்மையானது என்பதே என்னுடைய நிலைப்பாடு.

மிகப் பரந்த பார்வையில் இவ்விதமே இயக்கம் நடக்கிறது.

முரணற்ற இயக்கம் --> முரணுள்ள இயக்கம் --> முரணற்ற இயக்கம் (மேம்பட்ட, வேறான) ---> முரணுள்ள இயக்கம் (மேம்பட்ட, வேறான) --->

நிலைகளற்ற இயக்கம் (போலி நிலைப்பின் நிலைப்பு இயக்கம்)===>நிலைப்பின் நிலைப்பு===> நிலைமறுப்பின் நிலைமறுப்பு===>நிலைப்பின் நிலைப்பு===>நிலைமறுப்பின் நிலைமறுப்பு.....


இந்த இயக்கத்தின் பொதுப்பண்புகள் பின்வருமாறு
1. இயக்கம்
2. இயக்கத்தின் உள்ளார்ந்த அடுக்கேற்றப் பண்பு 
3. அடுக்கேற்றுவதற்கான சுயமுரண் உருவாக்கம்
4. சுயமுரண் ஊடான அடுக்கேற்றப் பண்புமாற்றம்
5. பண்புமாற்றத்தினூடு புதிய பண்பு(கள்)
6. பண்புமாற்றத்தினூடான பொதுப்பண்பு(கள்) கடத்தப்படல் 
7. இந்தத் தொடரேற்றம்  

2. இல் சொன்ன 'உள்ளார்ந்த சுய அடுக்கேற்றப் பண்பு' முரணில் இருந்து வருவதல்ல. இது சுய முரணை உருவாக்குகிற விபத்து. விதிகளால் மட்டுக்கட்டப்பட முடியாதது. நியதிவாதமும், விதிவசவாதமும் பொருத்தமற்றது.

நிலைப்பின் நிலைப்பு அடிப்படைகளில் அமைந்தது நிலைமறுப்பின் நிலைமறுப்பு.

நிலைமறுப்பின் நிலைமறுப்பில் மறுபடி ஒழுங்குகள் வருகின்றன. நிலைமறுப்பின் நிலைமறுப்பின் மேல் மறுபடி நிலைப்பின் நிலைப்பு கட்டமைகிறது.

இந்த நெடிய இயக்கத்தில், "மனித நோக்கும் இருப்பும்" (வரலாறும்) நிலைமறுப்பின் நிலைமறுப்பு அவத்தையில் கட்டமைந்த  நிலைப்பு இயக்கம்.

வரவிருக்கிற "செயற்கை நோக்கு" (Artificial Intelligence) நிலைப்பின் நிலைப்பில் கட்டமையப் போகிற நிலைமறுப்பின் நிலைமறுப்பு இயக்கம் . 

இற்றைத் தேதியில் செயற்கை நோக்கென்று நாம் சொல்லுவது நிலைப்பின் நிலைப்பில் அமைந்த அவத்தையில் 'இயற்கையான' நோக்கு ஆகும்.

மார்க்சிய மூலவர்களின் (பருப்)பொருள்முதலில் இருந்து இயக்கத்தை அணுகுகிற பார்வையும், அதனூடு  தத்துவத்தையும் விஞ்ஞானத்தையும் விளங்கி, வேறாக்கி, ஒருங்கிணைக்கிற செயலும் குறைபாடுடையவை.

அவற்றைத் திருத்துவோம். இயங்கியலினூடு புதுப்பிப்போம்.

இயக்கத்திலிருந்து பொருளையும், விஞ்ஞானத்தையும், தத்துவத்தையும்  (அனைத்தையும்) இயக்கத்திலிருந்து வரைவு படுத்துங்கள்.

இவ்வகையில் தத்துவ விஞ்ஞானத்தைப் பொருத்தமாக இணைத்து அந்தப் பெறுதியை விஞ்ஞானங்களின் விஞ்ஞானமாக்க முடியும்.



மார்க்சிய மூலவர்களை விடவும் மிக வலிமையான தத்துவச் சட்டகம் கிடைக்கும்.

என்னதான் வலியமையடைந்தாலும் அதைத் தொடர்ந்து திருத்தவே நாம் முயலவேண்டும். 

அதை 'அறிவு பற்றிய அறிவுக்கும்' (இவ்விதம் எண்ணற்ற சுயமுனேற்ற கூறுகள் உண்டு),  அத்தனை அறிவுத் துறைகளிலும் பிரயோகியுங்கள்.

புறம், அகம் என எதையும் பரும்படியாகப் புரிந்து கொண்டு திட்டமாகப் புரிந்து கொள்கிற இயக்கத்தை விரைவுபடுத்துங்கள். 

தோழர்களே, நாம் இயங்கியலை உள்ளெடுத்து, விளங்கிப் பயில்வதன் மூலம் சோசலிச மனநிலைக்கு முதலாளியக் கட்டம் முதிரமுன்பே வந்துவிடலாம். 

மிகப் பரந்த பார்வையில் இவ்விதமே இயக்கம் நடக்கிறது.

முரணற்ற இயக்கம் --> முரணுள்ள இயக்கம் --> முரணற்ற இயக்கம் (மேம்பட்ட, வேறான) ---> முரணுள்ள இயக்கம் (மேம்பட்ட, வேறான) --->

நிலைப்பின் நிலைப்பு (assertion of assertion) அடிப்படைகளில் அமைந்தது நிலைமறுப்பின் நிலைமறுப்பு (negation of negation).

நிலைப்பின் நிலைப்புக்கான வெளியை நிலைமறுப்பின் நிலைமறுப்பு இயக்கம் மறுபடி தோற்றுவிக்கிறது.

நிலைமறுப்பின் நிலைமறுப்பில் மறுபடி ஒழுங்குகள் வருகின்றன. நிலைமறுப்பின் நிலைமறுப்பின் மேல் மறுபடி நிலைப்பின் நிலைப்பு கட்டமைகிறது.

மனித நோக்கு நிலைமறுப்பின் நிலைமறுப்பு அவத்தையில் கட்டமைந்த ஒன்று. நிலைமறுப்பின் நிலைமறுப்பு ஐ அடிப்படையாக்கி நிலைப்பின் நிலைப்பாக (தொகுத்தறிவு முறையாக)  கட்டமைந்த ஒன்று.

வரவிருக்கிற "செயற்கை நோக்கு" (artificial intelligence) நிலைப்பின் நிலைப்பின் மீது கட்டமையப் போகிறவொன்று.

அதன் தன்னுணர்வுக் கட்டம் (self-conscious AI, General -> Super AI), நிலைப்பின் நிலைப்பு மீது கட்டமைகிற நிலைமறுப்பின் நிலைமறுப்புக் கட்டமாக இருக்கும்.

இற்றைத் தேதியில் செயற்கை நோக்கென்று நாம் சொல்லுவது நிலைப்பின் நிலைப்பில் அமைந்த அவத்தையில் 'இயற்கையான' நோக்கு ஆகும்.

நிலைப்பின் நிலைப்பு (முரணற்ற இயக்கம்), நிலைமறுப்பின் நிலைமறுப்பு (முரணுள்ள இயக்கம்) இவை பின்னிப்பிணைந்தவை. சுருளிவில்லாய் அவத்தைகளினூடு இயங்குபவை.

எனின் எங்களது இயங்கியல் கேள்வியை எழுப்புவோம்?

எது முதன்மையானது? மறுபடி அழுத்துகிறேன். ஒவ்வொரு வெளியிலும் அவத்தைக்கேற்ப முதன்நிலைக் கூறு இரண்டாம் நிலைக்கும் மறுதலையும் நடக்கும்.

காலம் என்பது இயக்கம் சார்ந்த கருத்து. இயக்கமன்றி காலம் இல்லை.

நான் கேட்கிற முதன்மையானது எதுவென்ற கேள்வி எது காலத்தால் முந்தியது? அதாவது அடிப்படையான இயக்கம் எது என்பதே.

நிலைப்பின் நிலைப்பா? நிலைமறுப்பின் நிலைமறுப்பா?

என்னுடைய முடிவு, மேலே நான் ஏற்கனவே சொல்லியிருந்தது போல நிலைப்பின் நிலைப்பே முதன்மையானது.

இதைக் கருத்துமுதல்வாதம், அத்வைதம், ஆன்மீகத்தோடு குழப்பிக் கொள்ள வேண்டியதில்லை. என்னுடைய முடிவு இயங்கியல் வழியிலானது. தெரிவுக்கான காரணங்களை மீண்டும் சற்று எளிய பதங்களில் விளக்குகிறேன். இலகுபடுத்தியிருக்கிறேன்.

1. நிலை உருவாகிற பொழுதுதான் மறுக்கவும் முடியும். இவை மிகத் தொடர்ச்சியாக நடந்தாலும் (அ=அ அல்ல என்பதே இயங்கியல் அடிப்படை) நாம் தத்துவ வலிமையால் முதன்மைக் கூறைக் காணுகிறோம்.

2. இயக்கத்தின் அடிப்படையாக முரணைக் கொள்ளுகிற பொழுது இந்த முரண் எங்கிருந்து வருகிறது என்கிற கேள்வி வருகிறது. இந்தக் கேள்வி பருப்பொருளை முதன்மை நிலைக்குத் தேவையற்றுக் கொண்டு வருகிறது.


அவ்விதம் வருகிற 'தீர்வும்' இயங்கியல் விரோத முடிவான பொருளும் (பொருள் என்று நான் தத்துவமொழியில் குறிப்பது பருப்பொருளையே) இயக்கமும் பின்னிப்பிணைந்தவை என்று மட்டும் சொல்லிவிட்டு முதன்மையைச் சொல்லாமல் மழுப்புகிறது.

மாறாக இயக்கத்தின் விளைவாக முரணைக் கொள்ளுகிற பொழுது உள்ளிணக்கம் மிகுந்து வருகிறது.

அனைத்தையும் இயக்கம் சார்பாக வரைவு செய்து மார்க்சிய மூலவர்களின் சிந்தனையக் காட்டிலும் ஆழம் போக முடிகிறது. 

நிலைமறுப்பின் நிலைமறுப்பு (negation of negation) ஆதிக்கமாயிருக்கிற அவத்தையில் அதற்கு எதிரான நிலைப்பின் நிலைப்பு (assertion of assertion), ஒழுங்கு உருவாகி வளர்கிறது. 

இந்த அவத்தையில் இயக்கத்துக்கு முரணான எதிர்கள் வளர்கின்றன. இவை இயக்கத்தின் வேகத்தைக் குறைக்கின்றன. 

மாறாக (இயக்கத்தின் இயக்கத்தின் இயக்கத்தளத்தில் ஏறி நின்று சொன்னால் 'நிலைமாறாக'),

நிலைப்பின் நிலைப்பு ஆதிக்கமாயிருக்கிற அவத்தையில் நிலைமறுப்பின் நிலைமறுப்பு உருவாகி வளர்கிறது. 


இந்த அவத்தையில் இயக்கத்துக்கு ஆதரவான எதிர்கள் வளர்கின்றன. இந்த முரண்கள் இயக்க வேகத்தைக் கூட்டுகின்றன. 

இயக்கத்தின் 'சுயமுன்னேற்ற' பண்பும் அது சுயமுன்னேற்றத்துக்காக உருவாக்குகிற கருவியான சுயமுரணும் அடிப்படைமுரண்களாக இருக்கின்றன. 

இப்போது இயங்கியலின் சுய அடுக்கேற்ற இயக்கமான சுருள்வில் இயக்கத்தை இன்னுமும் அதிகமாகப் புரிந்து கொள்ளலாம். 

சுருளிவில்லின் மேல் நோக்கிய இயக்கம் நிலைப்பின் நிலைப்பால் உந்தப் படுவது. 

சுருளிவில்லின் வட்ட இயக்கம் நிலைமறுப்பின் நிலைமறுப்பால்  உந்தப் படுவது.



3. முரணுக்கு 'முன்பு' (காலம்) என்ன இருந்தது கேட்பது முரணுக்கு முன்பு இயக்கம் இருந்ததா என்று கேட்பதாகவே அர்த்தம். இருந்திருந்தால் அது முரண் பண்பை (அதுவும் விபத்தே) வந்தடைந்திருக்காத முரணற்ற, நோக்கற்ற, நிலையற்ற இயக்கமாக இருந்திருக்கும்.

நிலையற்ற நிலையே இயக்கம்.

நிலை எதுவுமற்ற நிலையே ஆரம்ப இயக்கம்.

 ஆரம்ப இயக்கம் ஹெகல் சொல்லுவது போலக் கருத்தும் அல்ல. மார்க்சியர்கள் சொல்லுவதுப்போல பருப்பொருளும் அல்ல.

சுருளிவில்லை மிகச் சரியாக, மிக மிக மிகப் பரந்து பட்ட, மனித அறிவின் எல்லையில் நின்று வரைந்தால் அது மேல் நோக்கி இயங்க  'ஆரம்பித்து' நேரடுக்கேற்ற இயக்கத்தை அடைந்து (இயக்கத்தை இயக்குதல் - இயக்கம் தன்னை விரைவுபடுத்தவே முரண் பண்பைக் கொள்கிறது), முரண்கள் வலுத்தததும் மறுபடி ஒழுங்கமைகிற இயக்கம் தோன்றுகிறது.  வளைந்து மேலே செல்லச் செல்லச் வட்டப் பரப்புக் குறைந்து வந்து, ஈற்றில் ஏறக் குறைய நேர் மேலே செல்லுகிற இயக்கமாக மாறி, மறுபடி தலைகீழான சிறுவட்டப்பரப்பிலிருந்து பெருவட்டமாக மாறிச் செல்லுகிறது. அவத்தைகள் மாறி மாறி மீளுகின்றன. அவை சமச்சீராக இருப்பதில்லை. 

இயங்கியல் அறிவு இயக்கத்துக்கு எதிரான சக்தியாக உருவெடுத்து வளர்கிறது.

அதாவது புதிய முரணற்ற இயக்கமான இயங்கியல் சிந்தனை, ஆதி முரணற்ற இயக்கமான முரணற்ற இயக்கத்தை (சரியாகத்தான் எழுதுகிறேன் முரணற்ற இயக்கமான முரணற்ற இயக்கமே அடிப்படையானது, அதுவுவே பொருளுக்கும் அடிப்படை) எதிர்க்கிறது.

எதிலிருந்து வளர்ந்ததோ அதையே எதிர்க்கிற இயங்கியல் போக்குக்கு இயங்கியல் அறிவும் விதிவிலக்கல்ல.  

உதாரணத்துக்கு மார்க்சியத்தை அடிப்படையாக்கிய செயல் என்பது மார்க்சியத்தைத் தகர்ப்பதே (காலாவதியாக்கி, தேவையற்றதாக்குவதே).

எப்படித் தகர்ப்பது என்கிற தளத்தில் உரையாடலைத் தொடங்காமல், தர்க்கக் கூடாது, அப்படி நினைப்பதே பிழை (பாவம்?!) இவர்கள் எல்லோரும் திரிபுவாதிகள் என்று மேம்போக்காகச் சொல்லிக் கொண்டிருப்பது மார்க்சியச் செயலை மட்டுப்படுத்துகிறது.


ஒவ்வொரு சாத்தியப்பாடும் தமக்கெதிரான சாத்தியப்பாடுகளை உள்ளார்ந்து உருவாக்குவைதை, தமக்கு எதிர்நிலைகளை தமது உருவாகத்தினூடே உருவாக்குவதை விளங்கிக் கொள்ளுவோம். 

என்னுடைய இந்த இயங்கியலை வளப்படுத்துகிற செயல் அதைத் தகர்த்து இன்னொன்றை ஆக்குவதே. எல்லோரிடம் அதையே வேண்டுகிறேன். அதுவே இயல்பு. இதில் ஒரு 'மனக்குறை', 'பயமும்' வேண்டாம்.

உபயோகிக்கப் படுகையில் எல்லாவற்றிற்கும் தேய்மானம் உண்டு. இயங்கியல் கருவி அடங்கலாக. ஆனால் தேய்மானத்திலிருந்தே புதிய கருவியை உருவாக்குகிற கருவியாக இயங்கியல் இருக்கிறது. 


கத்தியை உபயோகித்து வருகையில் அது மழுங்கும். கத்தியை உபயோகிப்பதே அதைத் தொடர்ந்து தீட்டுகிற வகையில் பார்த்துப் பார்த்து வடிவமைத்தால் அதுவே இயங்கியல் கத்தி. 



இந்த வரிப்படம் தொடர்ந்து அவத்தை மாற்றங்களைச் சந்தித்து வரும். மாறி மாறி இந்த அவத்தைகள் ஒன்றிலிருந்து ஒன்று உருவாகி முன்னையதை மறுத்து வரும். அவத்தைகள் ஒரே அளவிலானவை அல்ல.

நிலைப்பின் நிலைப்பிலிருந்து நிலைமறுப்பின் நிலைமறுப்பு உருவாகி, நிலைமறுப்பின் நிலைமறுப்பு ஆதிக்கசக்தியாகி, மொத்த இயக்கத்துக்குமான ஆதிக்க சக்தியுமாகிறது.

அதாவது நிலைப்பின் நிலைப்பு, நிலைமறுப்பின் நிலைமறுப்பு இவை இரண்டும் பின்னிப்பிணைந்து இயங்குவதன் மொத்த இயக்கப் பண்பு நிலைமறுப்பின் நிலைமறுப்பாக மாறி வருகிறது.

இதன் காரணத்தையும் இந்த  நிலைப்பின் நிலைப்பின் அடிப்படையை எவ்விதம் இயங்கியல் வழி நிறுவுவது எனவும் பார்ப்போம்.

வரிப்படத்தில் நிலைமறுப்பின் ஆதிக்கக் கட்டம் அதிகமாக இருப்பதைக் கவனிக்குக.

நிலைப்பின் நிலைப்பின் திசைக் கதி (அதாவது திசைப்பட்ட மேல் இயக்கம், முன்னேற்றம் அதிகம்) அதிகம். அதன் வேகத்தை அதிகரிக்கிற, இயக்கத்தின் இயக்கமான  நிலைமறுப்பின் நிலைமறுப்பே அதிக கதியில் இயங்கும். இது ஒழுங்கை 'முன்னேற்றாது', குழப்பத்தை முன்னேற்றும்.

இயக்கத்தை "இயக்கத்தின் இயக்கம்" வென்றுவிடுகிறது.

இது இயங்கியலை மனித நோக்கு அறியத்தக்க (நிலைமறுப்பின் நிலைமறுப்பிலிருந்து உருவான
ஒரு நிலைப்பின் நிலைப்பு இயக்கமே மனித நோக்கு) அதியுயர் சிந்தனைச் சட்டகமாக, முரணற்றதாக இயங்கியல் தன்னைத்தானே உயர்த்திக் கொள்கிறது.

தத்துவத்தின் இயக்கம் தொகுத்தறி இயக்கம் - தனித்த நோக்கின் தவிர்க்க முடியாத தொகுத்தறி இயக்கம். என்னுடைய இயங்கியலின் பூச்சிய விதி இது. விரிவாக எழுதியிருக்கிறேன்.

இந்தத் தொகுத்தறி இயக்கம் சுழல் ஏரணங்களில் சிக்கித் தவிக்காது இருக்கவே (சிக்கித் தவிப்பதைத் தொடர்ந்து அவதானித்துக் குறைபாடுகளைத் தெரிந்து கொண்டதால்) அந்தக் குறைபாடுகளைத் தீர்க்கவே நான்/நாம் இயங்கியலை வளர்த்தெடுக்கிறோம்.

இயங்கியல் உள்ளார்ந்து வட்ட இயக்கங்களை முறியடிப்பதால் இயங்கியலைக் கொண்டு இயங்கியலை வரையறுப்பது சுழல் ஏரணம் (Circular Reasoning) அல்ல. சுழல் ஏரணத்தை முறியடிக்கவே நாம் இயக்கநிலைத் தர்க்கத்தைக் கொண்டுவந்தோம் என்பதை அறிக. In this case 'self-referencing' is perfectly okay. Please challenge if not. 

மிகப் பரந்த இயக்கப் போக்கில் நிலைமறுப்பின் நிலைமறுப்பே ஆதிக்கமாயிருக்கும்.

எவ்விதம் ஆரம்பக் கூறு முதன்மையாக இருந்து ஆனால் இரண்டாம் நிலைக்கூறு வளர்ந்து முதன்மைக்கூறாக மாறுகிறதோ அதே இயக்கமே இதுவும்.

மறுபடி முதன்மைக் கூறு மீண்டு வரும். அது உண்மையில் மூன்றாம் நிலையாகக் கொள்ளத்தக்கது.

ஒரு வசதிக்காகவும் தொடர்புக்காகவுமே நான் இரண்டு கூறுகளை வைத்துப் பேசுகிறேன். 

முதன்மை இரண்டாவதாகுவது பண்புமாற்றம். அது இரண்டையும் இணைத்துப் புதியதையே ஆக்கியிருக்கிறது   (இரண்டு அல்லது பல). அது மூன்றாவது.

முரணற்ற ஆதி இயக்கமும், புதிய முரணற்ற சிந்தனை இயக்கமான இயங்கியலும் ஒன்றல்ல. 

நான் எழுதிவருவது கருத்துமுதல்வாதமோ, ஆன்மீகமோ, இறையியலோ அல்ல. 

இயங்கியலை இயக்கம் சார்பாகவே முழுவதும் வடிவமைக்கிற பொழுது (மார்க்சிய மூலவர்கள் பருப்பொருள் சார்பாக இயக்கத்தை, இயங்கியலை வடிவமைத்தது பொருத்தமற்றது, பல சிந்தனைக் குறைபாடுகளுக்குக் காரணமானது), அது பின்வரும் வலிமைகளைப் பெறுகிறது.

1. நான் மேற்சொன்ன கருத்துமுதல்வாதம், ஆன்மீகம், இறையியலை 'எதிர்க்காது' அவற்றை உள்ளிணைத்து ஒடுக்க வேண்டிய வெளிக்குள் ஒடுக்கி வைக்கிறது. நடைமுறைத் தளத்திலிருந்து தத்துவங்களைத் துரத்த முடியுமே தவிர எதையும் அழிக்க முடியாது.  புதிய இயங்கியல்  சட்டகத்தைக் கொண்டு (இயக்கம் சார்பாக அனைத்தையும் வரைவு செய்கிற சட்டகமும் அணுகுமுறையும் - சட்டகமும் அணுகுமுறையும் ஒரே இயக்கத்தின் இரு வேறு நிலைகளே நான் முறை என்பது இரண்டையும் சேர்த்தே) மனித நோக்கு உருவாக்கத்தக்க அனைத்தையும் உருவாக்கவும், அதற்குரிய குறிப்பான வெளிகளுக்குட் போட்டு மூடவும் ( நடைமுறைத் தளத்திலிருந்து விரட்டியடிக்கவும்) முடியும்.

தத்துவத்தையும் விஞ்ஞானத்தையும் திருத்தமாக இணைத்து வருகிற விஞ்ஞானங்களின் விஞ்ஞானம் தத்துவங்களின் தத்துவமாகவும் இருக்கிறது.விஞ்ஞானத்தின் 'மட்டறுக்கிற' பண்பைக் கொள்கிறது. ஏனைய தத்துவங்களையும் (எவ்விதம் விஞ்ஞானத்தை உள்ளிணைத்ததோ அவ்விதமே) பொருத்தமாக இணைத்துக் கொண்டு தத்துவங்களின் தத்துவமாகத் தொடர்ந்து வளர்கிறது. 

ஆன்மீகம், கருத்துமுதல்வாதம், பின்னவீனவாதம் இவற்றையெல்லாம் மிக மிக மிக மிக எளிதாக நாம் எனி தகர்த்து ஒடுக்கலாம். செய்முறைகளை நான் மட்டுமல்ல, நாம் கூட்டாகச் செய்ய வேண்டும்.

ஒரு உதாரணத்துக்கு,

நிலைமறுப்பின் நிலைமறுப்பு இயக்கமே தனக்கான எதிர்விளைவுகளை (ஆகவும் அடிப்படையில் சமமமற்ற, மேற்பரப்பில் சமமாகத் தோற்றுகிற)  தோற்றுவிக்கிறது. இயற்கை நிலைமறுப்பின் நிலைமறுப்பில் இருப்பது.

இந்த எதிர்விளைவு, 'கர்மா' போன்றவையை சமூக வெளிக்குள் நிலைப்பின் நிலைப்பு ஆதிக்கமாயிருக்கிற சூழமைக்குப் பொருத்துவது தவறு. 

'கர்மா' கருத்தியல், தாக்கத்துக்குச் 'சமனும்' எதிருமான (இது தோற்றப்பாடே)  மறுதாக்கம் இவையெல்லாம் நிலைமறுப்பின் நிலைமறுப்பு வெளிகளின் தொழிற்படத்தக்கவை.



விசை தாக்காத பொருள் ஓய்வில் இருக்கும் அல்லது மாறாவேகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் என்பது நியூட்டனின் முதல் விதி.

(நியூட்டனின் விதிகள் மட்டுப்படுத்தப்பட்டுவிட்டன, சில வெளிகளில் பொய்ப்பிக்கப்பட்டுவிட்டன).

நியூட்டனின் விதியை இயங்கியல் வழி திருத்தினால் வருவது,

விசைதாக்காத விடத்து 'பருப்'பொருட்கள் இயங்கிக் கொண்டிருக்கும். இயக்கத்தின் இயக்கத்துக்குப் போகாது - ஆர்முடுகாது.

சார்பு வெளியில் எல்லாமும் மாறா வேகத்தில் இயங்கிக் கொண்டு இருக்கலாம். அல்லது எல்லாமும் ஓய்வில் இருக்கலாம். அதைத் துணிய முடியாது.

ஆனால் சார்பு வெளியில் உள்ள அனைத்தும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. 

சார்பு வெளியிலன 'இருப்பே' இருப்பை மறுக்கிற இயக்கமாகவும் இருக்கிறது. 

இயக்கத்தின் இயக்கத்துக்கு அதுவாகவே போகத்தக்க ஒரே கூறு இயக்கம் என்பதையே என்னுடைய இயங்கியல் அழுத்துகிறது. பருப்பொருட்களுக்குப் புறவிசை தேவை. 



மார்க்சிய, ஹெகலிய இயங்கியலிலிருந்து வேறுபட்டு, அதியுயர் திருத்தமடைகிற என்னுடைய இயங்கியலை 'இயங்கியலின் இயங்கியல்' என எழுத முடியும். இயங்கியலியன் இயங்கியலின் ... இயங்கியலின்... இயங்கியல் என்றும் எழுத முடியும்.

ஆனால் இயங்கியல் 'அறிவுச் செயற்பாடு', தொகுத்தறி செயற்பாடு. அது நிலைப்பின் நிலைப்பு வெளியை நோக்கி இயங்குவது; திசைதான் பண்பு; நோக்கி இயங்குவதென்பது  உள்ளிருந்து இயங்குவதே.

இதைத்தான் நான் சோசலிச மனநிலையென்பது சோசலிசத்துக்கான திசையில் சிந்திப்பது என்கிறேன். இது அறிவுத்திறன் சார்ந்ததல்ல (பருமன்). இது சுயமுன்னேற்றம் (சுயவிமர்சனம்) சார்ந்தது. இந்தச் சிந்தனை இயக்கம் நிலைப்பின் நிலைப்பு வழி நடந்தேறுவது. சிந்தனை வெளியில் சோசலிசத்தை வந்தடைந்து அங்கிருந்து புறத்தை அவ்வழியில் நடத்துவதே நிலைப்பின் நிலைப்பை புறத்திலும்  கொண்டுவரும். பேண்தகு (sustainable) சோசலிசக் கட்டம் அவ்வழியில் மட்டுமே சாத்தியம்.

சரி, விட்டதுக்கு மீளுகிறேன், இயங்கியலின் இயங்கியலின் இயங்கி... என்கிற விரிப்பைத் தொகுத்தறியின் அது இயங்கியலாகச் சுருங்கும்.

நிலைப்பின் நிலைப்பு  என்பது அறிவு வெளியில் உறுதிப்படுத்துவதை உறுதிப்படுத்துவதாகும் .

ஆகையால் இயங்கியல் என்று எழுதுவதே இயங்கியலின் இயங்கியலுக்கு மிகப் பொருத்தம்.

இவ்விதமே மிகத் திருத்தமாக இணைக்கப்பட்ட தத்துவ-விஞ்ஞானம் விஞ்ஞானங்களின் விஞ்ஞானத்திலிருந்து வெறுமனே 'விஞ்ஞானம்' ஆகும்.

அடுக்கேறிய அறிவின் அறிவைப் பற்றிய அறிவு, அதைப் பற்றிய அறிவு ....

சுருங்கி 'அறிவு' ஆகும்.

எல்லாவித சுய அடுக்கேற்றமும் சுருங்கி அதுவாகவும் ஆகிற நிலைப்பின் நிலைப்பையும் புரிந்து கொள்ள வேண்டும்.

மொழி மிகவும் மட்டானது. அதனுடைய பதங்களின் "பொருள்" (அர்த்தம்) இயக்கத்துடன் மாறுவது. இயக்கத்தின் இயக்கத்தோடு மொழி ஈடுகொடுத்து இயங்காது. அவதானம்.

பிரயோக உதாரணங்கள் எண்ணற்றவை. மிஞ்சிப் போனால் சில பத்தாயிரம் உதாரணங்களை எழுதுவே என்னுடைய ஆயுட்காலத்தில் சாத்தியம். முறையைப் புரிந்து எடுக்கச் செய்வதே சரியானது. அதைத்தான் முயலுகிறேன். 

2. அனைத்தையும் இயக்கத்திலிருந்து வரைவுபடுத்துவது அதியுச்ச உள்ளிணக்கத்தைக் கொண்டு வருகிறது. எதையும் பொருத்தமாகவும், திருத்தமாகவும் இணைக்க முடிகிறது. உதாரணமாக தத்துவம் விஞ்ஞானத்தைத் மிகத் திருத்தமாக இணைப்பது.

3. கையடக்கமான இயக்க அடிப்படை என்கிற ஒற்றையிலிருந்து (இருமைவாதம் ஒருமைக்கும், ஒருமைவாதம் இருமைக்குமே இட்டுச் செல்லும்) புறவயப்படுத்தல், சமன்பாடாக்கிக் கணினியைக் கற்கச் செய்தலை மேம்படுத்தலாம். வாய்ப்பு மிக அதிகம்.

4. விஞ்ஞானம், கோட்பாட்டாக்கம், தொழிநுட்பம், செயற்கை நுண்ணறிவு போன்ற படிமுறைத் தளங்களில் பெரும்பாய்ச்சல்கள் நிகழ்த்தலாம்.

வரலாற்று இயங்கியலில் (வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்பது தவறான பதம், தேவையற்ற Materialist அடையாளம் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இயங்கியல் ஆய்வை முடக்கி விட்டது), வர்க்கப் படிநிலைகள் உருவாகி வளர்வதையும், இரண்டாம் நிலைகளை முதல்நிலைக்குப் போவதையும் விளக்குவோம். இயற்கையுடன் அணுக்கமாயிருக்கிறவற்றின் 'நேர்த்திறம்' எவ்விதம் மெல்லக் கசிந்து சமூக ஒழுங்குகளை முன்னெடுக்கிறது என்பதையும் பார்ப்போம். எது, எவை முதலில் மாறும் என்கிற புறவயத்தை இவ்விதம் கட்டியெழுப்புவோம்.

அடித்தளம்<---====> மேற்பரப்பு ஒரு சார்பியக்கம். இந்தச் சார்பியக்கம் சமூக மாற்றங்களைப் புறவயப்படுத்தி, சமூகப் பண்புமாற்றங்களுக்கான (சோசலிசப் புரட்சி அடங்கலாக) காலம், திசையைத் துணிய உதவாது. 

மேற்சொன்ன வகையில் புறவயப்படுத்த இயற்கையின் இயக்கத்திலிருந்து அனைத்துக்குமான 'தூரங்களைப்' புறவயப்படுத்தி இயக்கச் சமன்பாடுகளை ஆக்க வேண்டும். 





நான் இதை எழுதி முடித்தவுடன் மீண்டும் முதலில் இருந்து வாசித்தால் திருப்தி வரமாட்டேன் என்கிறது. ஏனெனில் ஒவ்வொரு தடவையும் வாசிக்கிற பொழுது என்னுடைய அறிவு அடுக்கேற்றம் அடைகிறது. அது ஒருபோதும் குறைப்போவதில்லை (உடலின் குறைபாட்டால் ஒரு கட்டத்தில் குறையும்).

ஆகையால் நான் எழுதியதை விட எழுதாததே அதிகம் என்பதைப் புரிந்து கொண்டு தொடர்ந்து மாறுகிற முறையையும் அதன் போக்கையும் அதன் பலத்தையும் புரிந்து கொள்ளுமாறு வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

அதை மாற்ற வெளிக்கிட்டால் மாற்றிக் கொண்டே இருக்கவேண்டியதுதான் என்பது புரிகிறது. முறையை மற்றவர்கள் உள்ளவாங்கப் போதுமான புறவயம் இருப்பது எனக்குப் போதுமானது.

ஒவ்வொருவருடைய மட்டமும் வேறானது என்பதால் அவர்கள்தான் வாசிக்கிற தடவைகளின் எண்ணிக்கை, வேகத்தைத் தமக்கேற்றாற் போல நிர்ணயிக்க வேண்டும்.

இந்த முறையை (முறை என்பது முறை->சட்டகம்->முறை, முடிந்த வரைக்கும் எல்லாப் பதங்களையும், வரைவுகளையும் இயக்கமாகச் சிந்தனையில் பாருங்கள்) உடைப்பதே எனி என்னுடைய அறிவியக்கம். இந்த முறையைப் பயன்படுத்திக் கொண்டே முதன்மை இயக்கமாக உடைக்கவே (இன்னுமும் முன்னேற்றவே) முயல்வேன்.

அதையேதான் அனைவரும் செய்யவேண்டும். தங்களுக்கான முறைகளை ஆக்கும் முயற்சியே அனைவருக்கும் முதன்மை நோக்காக இருக்கவேண்டும். அது பிழைப்புவாதம் களைந்து (பிழைப்புவாதத்தை இயக்கம் கொண்டு வரைவு செய்திருக்கிறேன்) அறிவு இயக்கமாக இருக்க வேண்டும்.

இதுவே சோசலிச கருத்துவெளி. 

இதைத்தான் புறவெளிக்கும் கடத்தப் போகிறோம்.

கருத்துவெளியில் இல்லாததை, சோசலிசத்துக்கான இயக்கவெளியில் இல்லாததை சோசலிச வெளிக்குள் 'திடீரெனக்' கொண்டு வருவதென்பதெப்படி? 

பண்புமாற்றம் அளவுமாற்றத்தினூடே நடைபெறுவது. சமூகத்தின் சோசலிச மனநிலையாளர்களின் அதிகரிப்புடனே சமூகமே சோசலிசத்துக்குப் பண்புமாற்றம் அடையும். 

மொழி இயங்கியல் சிந்தனைக்கானதல்ல. அது நிலைப்பின் நிலைப்பு இயக்கத்தினால் மட்டுப்படுத்தப்பட்ட கருவி.  வெறும் மொழியைக் கொண்டு இயங்கியல் உரையாடலை நிகழ்த்த முடியாது. 

இயங்கியல் தர்க்கத்தைப் புரிந்து கொண்டு மொழியின் பின்னாலிருக்கிற இயக்கத்தைப் பரஸ்பரம் சுட்டிக் கொள்ளுகிற பொழுதுதான் இயங்கியல் உரையாடல் நிகழும். 

இயங்கலகுச் சிந்தனை என்று பெயரிட்டு அந்த முயற்சியையும் செய்து வந்தேன். முடிந்தளவுக்கு இயக்கத்தைச் சிறைப்பிடிக்கிற பதங்களாக மொழியை முன்னேற்றுகிற வேலையையும் செய்தாக வேண்டும். இயங்கியல் அகரமுதலியாக அது இருக்கும்.

எவை எல்லாமுமே தொடர்ந்து திருத்தமடைகிறவை என்பதையும், அடுத்த அவத்தையில் தலைகீழ் மாற்றத்தையும் (எல்லாப் பண்புகளும் தலைகீழாகாது, அனைத்துக்கும் பொதுப்பண்புகள் உண்டு, அதைக் கொண்டுதான் இயங்கியலை வடிவமைத்திருக்கிறேன்) புரிந்து கொண்டு மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்.

ஒரு பண்புமாற்றத்தில் ஒன்றோ பலதோ பண்புகள் மாறலாம். மாறியது எது, மாறாதவை எவை (அல்லது எது) எனத் தெரிந்து கொண்டே புதிய அணுகுமுறையை அமைக்க வேண்டும்.

குறித்த சூழலுக்கு குறித்த தீர்வே உண்டு. ஆனால் அனைத்துக்கும் பொதுவான வழிமுறைகளைக் கொண்டு இந்த இயக்கத்தை அதியுயர் வினைத்திறன் உடையதாகும்படி தொடர்ந்து நெறிப்படுத்தவேண்டும்.

திட்டவட்டத்திலிருந்து பரும்படியும் பரும்படியிலிருந்து திட்டவட்டமும் தொடர்ந்து நடந்தாக வேண்டும்.

சற்று நேரங் கழித்து மீள வாசிக்கிற பொழுது என்னுடைய சிந்தனை குறைபாடுகளும், இன்னுமும் பொருத்தமான பதங்கள், வாக்கியங்கள், அடிக்கோள்கள் தோன்றும். இது சுயதம்பட்டமோ, திமிரோ கிடையாது. இயங்கியல் சிந்தனையின் இயல்பு நிலை. அதையும் இயங்கியல் சிந்தனையினூடு புரிந்து கொண்டு அடுக்கேறுகிற பொழுது அமைதியும், 'நிம்மதியும்' கிடைக்கிறது.

எவ்விதம் என்னை அறிவுக்காகச் சார்ந்திருக்கிறவர்களை விரட்டி விடுவதன் மூலம் (என்னுடைய அறிவு முறையைப் புறவயப்படுத்திப் பொதுவில் வைப்பதன் மூலம்) எனக்கு விடுதலை கிடைக்கிறதோ அதே போலவே அறிவினால் வருகிற குறைகளுக்கும் அறிவின் மூலமே விடுதலை கிடைக்கிறது. 

'அறிவு வளர்ச்சியால்' அழிந்தோம். 'அறிவு' கெட்டது - என்பதாக வளர்ச்சிவாதத்தையும் அறிவின் வளர்ச்சிப் போக்கையும் குழப்பிக் கொண்டிராமல், 'எந்த வகை அறிவு' கெட்டது, எது நல்லது (முன்னேற்றகரமான முரண்களைக் கொண்டது) என்கிற 'அறிவைத்' தேடி வளர்த்துக் கொண்டு தீர்வுகளுக்கு வாருங்கள்.

தீர்த்தல் என்பது முன்னேற்றகரமான முரண்களுக்கு நகர்தலே. 

என்னைச் சார்ந்து இருக்காமல் என்னுடைய கருத்தைப் புரிந்து கொண்டு, அதில் வளர்ந்து, அதை வளர்த்து, என்னை எதிர்த்து, என்னை ஒதுக்கும் படி தோழர்களை வேண்டுகின்றேன்.

அவ்விதமே நான் அடிமைத்தளையிலிருந்து முழுவிடுதலை அடையமுடியும்.

நான் என் சிந்தனையின் வீரியத்தைக் கண்டு சறுக்கிவிட மாட்டேன்.

ஹெகலுக்கும், மார்க்சியர்களுக்கும் வருகிற மூடுகிற மனவிழைவு இயங்கியல் தர்க்கத்தின் குறைபாட்டால் வருவது.

இதையும் தாண்டிய சிந்தனைகளைத் தொடர்ந்து தேடிக் கொண்டும் அதற்காக அனைவரையும் ஊக்குவித்துக் கொண்டும், கட்டாயப்படுத்திக் கொண்டும், விமர்சித்துக் கொண்டும் இருப்பேன்.

ஏனெனில் நான் ஒரு இயங்கியலாளன்.

இயங்கியலாளருக்குக் கருத்துவெளியில் தோல்வி கிடையாது.

மண்ணில் மல்யுத்தம் செய்கிற அன்ராயஸ் (Antaeus) பலத்தை மண் (தெய்வம்) அதிகரித்து வருகிற (கற்பனைக்) கதையாக, கருத்து வெளியிலான இயங்கியலாளரின் திறத்தை எல்லாவித கருத்து 'இயக்கமும்' அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

சரியும், தவறும், நேர்ப்படியேற்றமும், மறைப்படியேற்றமும் தெளிநிலையை அதிகரிக்கிற திசையில் மட்டுமே நகரும்.

நம்மில் பலர் இயங்கியலாளர்கள் ஆக வேண்டும். முடியாதிருப்பது வேறு. ஆனால் முயல வேண்டும். அதுவே ஒரு வரை இயங்கியலாளர் ஆக்கி விடும். திசையில் திரும்புதலே வந்தடைதல். திரும்பினால் போதும். இயக்கம் இயல்பானது. அது கொண்டு சேர்க்கும். இயக்கத்தின் இயக்கத்தை  நாம் அதிகரிக்க வேண்டுமானால் அதற்கே விசை வேண்டும். அதற்கு முழுமூச்சாக முயலவேண்டும்.

திரும்புவதற்கும் விசை வேண்டும். அது ஒப்பீட்டளவில் குறைவானது. எமது கைகளில் இருப்பது. எந்த அறிவுப் படிநிலையில் இருந்தாலும் நான் எனக்கு நேர்மையாக இருப்பேன் என்று உறுதி எடுத்துக் கொள்ளுவது. 

அவரரவருக்கு வேண்டியளவுக்கு நேரமெடுத்து இயங்கியல் முறையை புரிந்து கொண்டு என்னுடன் உரையாட முனையுங்கள். அல்லது என்னுடைய நேரத்தைச் சுரண்டுகிற, உழைப்பைச் சுரண்டுகிற செயற்பாடாக அது இருந்து விடும். 

இயக்கத்தை விளங்கி மேம்பட்ட இயக்கத்தை நிகழ்த்துவோம் தோழர்களே. 

கணா
01/03/2018


பிற்சேர்க்கைகள்
1. நான் எழுதுவது 'அத்வைதம்' அல்ல. இயங்கியல்.

பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதத்தை எவ்விதம் மட்டறுத்து அவற்றின் வெளிகளைச் சுருக்கி இயங்கியல் கருவியாக்கினேனோ (மற்றைய பதிவில் இருக்கிறது) அதே வழியில்தான் துவைதமும் அத்வைதமும் மட்டறுக்கப்படும். இயக்க வழியில் இயக்கம் இயக்க முரணாகவும், முரணியக்கமாகவும் மாறி வருவது ஒன்றிலிருந்து இரண்டும், இரண்டிலுருந்து ஒன்றும் வருவதாகும். துவைதம், அத்வைதம் என்பவை பொருத்த மற்றவை. ஒன்றிலிருந்து ஆரம்பித்தாலும் இரண்டே அதிக வலு அடையும். நிலைப்பின் நிலைப்பிலிருந்து (ஒன்று)  ஆரம்பித்தாலும் ஓட்டத்தில் நிலைமறுப்பின் நிலைமறுப்பே (இரண்டு) வலுவடையும்.

'முதன்மைக்' கூறு ஒன்றுமல்ல, இரண்டுமல்ல. எல்லாமும் ஒன்றே, எல்லாமும் இரண்டே என்றெல்லாம் சொல்ல முடியாது.

எவ்விதம் பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம் சுருங்கிய தத்துவமோ அவ்விதமே துவைதமும் அத்வைதமும் இயங்கியலின் ஓட்டத்தில் அர்த்தமற்றவையாக மாறுகின்றன.


2. என்னுடைய இந்த இயங்கியலை வளப்படுத்துகிற செயல் அதைத் தகர்த்து இன்னொன்றை ஆக்குவதே. எல்லோரிடம் அதையே வேண்டுகிறேன். அதுவே இயல்பு. இதில் ஒரு 'மனக்குறை', 'பயமும்' வேண்டாம்.

ஒவ்வொரு சாத்தியப்பாடும் தமக்கெதிரான சாத்தியப்பாடுகளை உள்ளார்ந்து உருவாக்குவதை, தமக்கு எதிர்நிலைகளை தமது உருவாகத்தினூடே உருவாக்குவதை விளங்கிக் கொள்ளுவோம்.

உதாரணத்துக்கு மார்க்சியத்தை அடிப்படையாக்கிய செயல் என்பது மார்க்சியத்தைத் தகர்ப்பதே (காலாவதியாக்கி, தேவையற்றதாக்குவதே).

எப்படித் தகர்ப்பது என்கிற தளத்தில் உரையாடலைத் தொடங்காமல், தர்க்கக் கூடாது, அப்படி நினைப்பதே பிழை (பாவம்?!) இவர்கள் எல்லோரும் திரிபுவாதிகள் என்று மேம்போக்காகச் சொல்லிக் கொண்டிருப்பது மார்க்சியச் செயலை மட்டுப்படுத்துகிறது.

உபயோகிக்கப்படுகையில் எல்லாவற்றிற்கும் தேய்மானம் உண்டு. இயங்கியல் கருவி அடங்கலாக. ஆனால் தேய்மானத்திலிருந்தே புதிய கருவியை உருவாக்குகிற கருவியாக இயங்கியல் இருக்கிறது.

கத்தியை உபயோகித்து வருகையில் அது மழுங்கும். கத்தியை உபயோகிப்பதே அதைத் தொடர்ந்து தீட்டுகிற வகையில் பார்த்துப் பார்த்து வடிவமைத்தால் அதுவே இயங்கியல் கத்தி.

There's a strong tendency to derive the theory of everything from this new logic.

This is the first time in history (history of organisms)that dialectics is proven by dialectical logic itself.

Actually this is the first ever proof in the history.

This is the first perpetual philosophy and the philosophy of superintelligence.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home